திங்கள், 3 அக்டோபர், 2022

Celebrating Life

A wake up call from my school mate CK (acronym for Chandra Kanth) is usually not unexpected but always has agendas or plans. It sounded otherwise today. The news of his father’s demise came as a shocker. His dad was nothing less than a hero to him and I was worried about how CK was going to manage this loss.


CK’s family had a closely knit setup and everyone had each other’s back. His dad was the man who architected the knit and whose unconditional love had a bigger impact on CK and his two brothers. As I was reaching CK’s house I became more and more worried. It doesn’t matter if someone who has reached 50, loses their dad but still grieves. A gentle fella like CK is going to break down and certainly I should be there for him.



When you grow up, your dad become your friend. It's an amazing transformation of relationships; one that is often unanticipated. Suddenly, you want to talk with him about personal matters and not just the source of advice on what college you should attend or whether you need car insurance.


Unsurprisingly, the dad-child dynamic changes when a child becomes an adult. In most cases, there's no resentment involved and both parties are generally pretty happy about it. 


As expected there was a big turnout at CK’s place. Preparations for the final send off seems to have commenced. But hang on, the guy who works in the supermarket appears in tears and CK looks to be consoling him. Shouldn’t it be the other way around? Am I in a multiverse and did I land up in a wrong CK’s house? Why is the bank clerk and the fruit vendor crying? Something is not right here.




“Hey bud, sorry for your loss. I know it’s hard but I’ll be there for you”, I approached CK.


“That’s fine dude, be seated and I will be with you in a while”.


Unusual but interesting what’s happening here.


“So dude, you must be wondering what’s happening here huh?” How the hell did this guy became a mind reader?


“You know how close my dad was to me. He loved us, sacrificed his life that was immeasurable and unforgettable. We lost our mom when we were very young. The struggles he went through and pain he endured as a single parent to support us was much bigger than our mightiest achievements.

Yet, he lived larger than his life. He listens when someone tells him their story, makes them feels important. 

He took up genuine interest in others and made a lot of friends. You saw the supermarket guy? He was a drunkard and dad ensured he received counselling to rid of his habits. Dad set his own goals and developed himself as an engaging and fascinating personality.

You know he is a family man. But do you know that he is an intriguing and well-rounded person? He learned few languages, arranged his own holiday trips, took cooking classes and teaches?

I’ve never seen him dislike something. He loves company of others, does something new everyday and accepts people who they are.”


“But hey, won’t you miss him?”, I asked.


“Hell yes! I’ll miss his warm hugs during my hardships, his kind words and motivation when I’ll be slumping, his coffee that energises my entire day, his bright smile and unadultered love.

But then, won’t it be honourable to celebrate this man’s journey rather than feeling miserable and lost?”


True it is, death isn’t the end after all.

வியாழன், 29 ஏப்ரல், 2021

கொரோனா பெயர்ச்சி

 தொடங்கும் முன் ஒரு சின்ன disclaimer. இந்த பதிவு அரசியல் / மருத்துவ / உளவியல் பற்றியதல்ல. வெறும் எண்ணக்குவியல்.  புரியல? வெறும் புலம்பல் தாங்க. மேல படிங்க.


ரொம்ப நாட்களுக்குப் பிறகு என் நண்பன் ராமச்சந்திரனை பார்க்கும் ஒரு வாய்ப்பு. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என எவ்வளவு அலை வந்தால் என்ன? அந்த அலை மேலே மிதக்கும் முழுகாத ஷிப்பே எங்கள் பிரண்ட்ஷிப், என்று நானே சொல்லிக்க வேண்டியது தான்.


தெரியாதனமாக அவன் வீட்டுக்கு சென்ற வாரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. 


வீட்டுக்குள் நுழையும் போதே முதல் அதிர்ச்சி. ஏதோ மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரி வீடு முழுக்க செட்டப். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் இரண்டு முகக்கவசம் (mask), கையுறை (gloves), சானிடைசர் (sanitizer) கச்சிதமாக இருந்த அவனை பார்த்ததும் அடுத்த அதிர்ச்சி.


இதே நிலைமை போனால் இவனுக்கு அடுத்த குழந்தை பிறக்கும் போது அது, கர்ணன் கவச குண்டங்களோடு பிறந்தால் போல், அனேககமா மாஸ்க் சானிடைசர் சகிதமாக பிறக்க வாய்ப்புண்டு.


வீட்டுக்குள் நான் நுழையும் முன்பே கிட்டத்தட்ட என் தலை முதல் கால் வரை சானிடைசரால் குளிப்பாட்டி, மூச்சு திணற இரண்டு மாஸ்கை மாட்டிவிட்டுத் தான் உள்ளே வர அனுமதித்தான்.


வழக்கமாக அவன் வீட்டுக்கு வந்தால் காஃபியும் கையுமாக அவன் மனைவி ஜானகி வரவேற்ப்பாள். இந்த முறை கபசுர குடிநீர். எங்க ஆபீஸ் காஃபி தொடர்ந்து 2 வருடம் குடித்தால் கொரோனா என்ன பாம்பு கடி கூட ஒன்னும் செய்யாது என்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. வீடு முழுக்க மாத்திரை மருந்து - oxygen cylinder மட்டும் தான் பாக்கி.


Fear என்ற நிலையை தாண்டி paranoid என்ற நிலையை எட்டிவிட்டான் என்பது தெளிவாகத் தெரிந்தது.


அவனைச் சொல்லி தப்பில்லை. Twitter, Facebook, தொலைக்காட்சி என எதைத் திறந்தாலும் எதிர்மறைச் செய்திகள்.  


"தொடர்ந்து இரண்டு மணி நேரம் செய்திகளை பார்த்தால் இந்த உலகம் இனி எனக்கானதில்லை என எண்ணம் வரத்தான் செய்யும்."


ஒரு ஜோசியர் இந்தியா ஜாதகம்ன்னு வரைந்து குரு பெயரும் போது நிலைமை சரியாகும்ன்னு எழுதியிருக்கிறார். அது கூட பரவாயில்லை சார், அந்த பதிவை 300 பேர் ஷேர் பன்னிருக்காங்க பாருங்க, என்னத்த சொல்ல.  கொரோனா பெயர்ச்சி எப்போ வரும்ன்னு நானும் கமெண்ட் போட்டுட்டு வந்துட்டேன்.


சில நேரம் மாஸ்க் நம் மூக்கு மற்றும் வாய்க்கு மட்டும் அல்ல, நம் காதுகளுக்கும் தேவை தான்.





நேர்மாறாக, இது வெறும் சளி காய்ச்சல் மாதிரி தானே சார், எதுக்கு பயப்படனும் என்ற மனநிலை பலரிடம் உண்டு. அதனால் தான் என்னவோ மருத்துவர்களும் அரசாங்கமும் சொல்லும் எந்த வழிமுறைகளும் எனக்கில்லை மற்றவர்களுக்குத்தான் என்ற எண்ணம். 


எவன் நாசமாக போனால் எனக்கென்ன, என் இஷ்டம் போல் என் வாழ்க்கை என நினைக்கும் நபர்களை மட்டுமல்ல அவர்களோடு அண்ணன் தம்பி புழங்கும் பதினெட்டு பட்டி சனங்களையும் கொரோனா விடப்போவதில்லை.


"பயத்தை விட எச்சரிக்கை, விழிப்புணர்வு முக்கியம்."


நம்மைச் சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள், நல்ல மனிதர்கள். அதை எந்த தொலைக்காட்சியோ சமூக ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. 


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கமின்ஸ் (Pat Cummins) தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், கொரோனாவினால் இந்தியர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து தான் வருந்துவதாகவும் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு 50 ஆயிரம் டாலர் தொகையை பிராணவாயு வாங்க அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.




Boss, நீங்க மெய்யாலுமே உயர்ந்த மனிதர் தான். வணங்க வயதில்லை, வாழ்த்துகிறேன்.


என் நண்பன் ராமச்சந்திரனின் லூட்டி தாங்க முடியல. வாஸ்து படி டிவியை சுவர் இருக்கும் பக்கம் திரும்பி வைத்தால் கொரோனா வராதுன்னு சொல்லிவிட்டு வந்தேன். 


நல்லதே நடக்கும். நம்புவோம். இதையும் கடந்து வெல்வோம்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கொஞ்சம் சிரிங்க பாஸ்…வீட்டுக்கு வீடு மெகாசீரியல்

நேற்று பார்த்த படத்தில் எங்க கதை இருந்ததுன்னு சோபாவில் மல்லாக்க படுத்து யோசனை செய்ய ஆரம்பிக்கும் போதே என் நெருங்கிய நண்பன் ராமசந்திரனோட வீட்டம்மா பானுமதியோட ஃபோன் “அண்ணே! வந்து என் வீட்டுகாரரை பாருங்க. காலைலேந்து எதேதோ உளரிகிட்டு இருக்கார்”.


“ஏங்க அவரு உங்க ஃப்ரண்டு தானே?” - இது என் வீட்டம்மா.


“கரெக்ட் மா.. எவனாவது உளரிகிட்டு இருந்தான்னா கண்டிப்பா அவன் என் ஃப்ரண்டா தான் இருப்பான். போய் பாத்துட்டு வரேன்”.


“டேய் ராமசந்திரா.. என்னடா ஆச்சு?”


“டேய், நான் நேந்து எமதர்ம ராஜாவை பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டே, பாக்க நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இருந்தாரு”.


எனக்கு “பக்”கென்று தூக்கி வாரிபோட்டது. அப்பறம் கொஞ்சம் நிதானித்துகொண்டு,


“அது நம்ம பால்காரன் ரங்கசாமி மாதிரி இல்லை, ரங்கசாமியே தான். நேத்து மாட்டை கொண்டுபோயிருக்கான், அவனை பார்த்து நீ பயந்து போய்ட்டே”


அது கூட பரவாயில்லை, அவன் கூட்டிகிட்டு போனது பசுமாட்டை. இவன் கண்ணுக்கு அது எறுமை மாடா தெரிஞ்சிருக்கு. It’s a medical miracle. 


“அப்போ இது மனபிரந்தியா தான் இருக்கும்”. “டேய் எனக்கு split personality இருக்குன்னு நின்னைக்கிறேன்”.


“உனக்கு ஒரு personality கூட இல்லையே. இந்த லட்சனத்துல split personality கேக்குதோ. ஒழுங்கா சாப்ட்டு தூங்கு”. 


நாலு மாசமா பூட்டி வெச்சு மெகாசீரியாலா பார்க்க வைச்சா அவனும் என்னதான் பன்னுவான்.


பானுமதியிடம் கொஞ்ச நாள் கேபிள் டீவியை நிறுத்தச் சொல்லிவிட்டு வந்த்தேன். 



கொரோனா வந்தாலும் வந்தது, அவனவன் வீட்டைவிட்டு போகமுடியாத மாதிரி ஒரு சூழ்நிலை. இந்த மெகாசீரியலை பார்த்து பார்த்து இன்னும் பைத்தியமானது தான் மிச்சம்.


இந்த மெகாசீரியல்களில் உருப்படியான விஷயம் எதாவது இருக்கா? ஒரு வருஷம் முன்னாடி பார்த்த ஒரு எப்பிசோடும் இப்போ ஒளிபரப்பும் எப்பிசோடும் அனேகமாக ஒரே மாதிரி இருக்கும். 


“கொரோனாவினால் புது எப்பிசோடுகள் படப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பழைய எப்பிசோடுகள் மறுஒளிபரப்பு செய்யப்படும்”ன்னு அறிவிப்பு வேற.


அடேய், மனசாட்சியை மொத்தமா எந்த சேட்டு கடையில அடகுவச்சீங்க, சொல்லுங்கடான்னு சட்டையை புடிச்சு கேட்கனும்னுதான் தோனுது.


என் பாட்டி கிட்டத்தட்ட நாலு மெகாசீரியல் பார்த்தபின், அந்த கடைசி சீரியல் கதை என்னன்னு கேட்டால், ஒரு புது கதையை சொல்வார்.


ஒரு நாள் சீக்கிரமாக தூங்கிவிட்டார். எட்டரை மணி இருக்கும். திடீரென்று அலாரம் அடித்தது போல் எழுந்து “டேய், குடும்பம் போறது டா.. குடும்பம் போறது” என்று அழாத குறை.


“என்ன பாட்டி, எந்த குடும்பத்துக்கு என்ன ஆச்சு” என்று கேட்டபின் தான் தெரிந்தது, அது “குடும்பம்” என்ற  மெகாசீரியலாம். 


ஆங், என் ஃப்ரண்ட் ராமசந்திரனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கலியே. கொஞ்ச நாள் முன்னாடி அவன் வீட்டுக்கு போனபோது ஏதோ அழும் குரல் கேட்டது. “ஏண்டா இப்ப அழர”ன்னு கேட்டா “டேய், இது உனக்கு நான் அழரா மாதிரி கேட்குதா! சங்கீதம் டா. இது சங்கீதம். நான் பாடினது தோடி ராகம். தெரிஞ்சுக்கோ”. என்றான்.


ஆண்டவா, ஒன்னு இவனை ஊமையாக்கு, இல்ல என்னைய செவுடாக்கு. முடியலப்பா.

சனி, 20 ஜூன், 2020

மனம் எனும் மருந்து

சமீபத்திய செய்திகளை நீங்கள் வாசித்திருந்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நிகழ்வை அறிந்திருக்ககூடும். 

A brilliant actor par excellence, gone too soon. 

தல தோனியை தான் நடித்த “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நம் கண் முன்னே காட்டியவர். அச்சு அசலாக தோனியின் mannerism, body language அந்த படத்தில இருக்கும். 

34 வயது, heartthrob, அழகன், sheer brilliance in his field of interests. He ticked every box. 



இவன் யாரென்று தெரியாது, சொந்தமோ நட்போ இல்லை. இருந்தாலும் மனசில் ஊசியை அழுத்தி குத்தியது போல வலி. ஏண்டா இப்படின்னு சட்டையை புடிச்சு கேட்கவேண்டும். 

இதில் பெரிய ஆச்சரியம் கலந்த அசிங்கம் ,பத்திரிக்கைகளும், ஊடகங்களூம், சமூக வலைத்தளங்களில் கருத்து கந்தசாமிகளின் பஞ்சாயத்துகளும்... அப்பப்பா, முடியலடா சாமி.

We become defence experts when there are issues at the borders, we become psychiatrists when we hear such suicidal cases, we become medical experts when we hear news about new virus attacks. 

This is beyond Science!

பத்திரிக்கை துறை வழக்கம் போல தன் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை காட்டியது. சுஷாந்தின் தற்கொலை படங்களை ஒளிபரப்புவது, அவரின் பிரியமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரும் போது மைக்கை நீட்டி கருத்து கேட்பது என்று அநாகரீகத்தின் உச்சத்தை தொட்டனர். கருத்து சொல்லும் இடமா அது? சுஷாந்தின் உற்ற தோழி கிருத்தி சனோன் (Kirti Sanon) தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களை வெளுத்து வாங்கியது சற்று ஆறுதல் தந்தது.





என்ன இருந்தாலும் இந்த பையன் இப்படி செஞ்சிருக்க கூடாது, பாவம் அவனை பெத்தவங்க மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று கேட்பவர்கள் தான் இங்கு ஏராளம். Instagram-இல் 11.1 மில்லியன் followers; டிவிட்டரில் 2 மில்லியன் followers, ஆனாலும் பாவம் சார் பையன் தனிமையில் வாடியிருக்கான் போல என வேறு கோணத்தில் அலசல்.

முதலில் ஒருவரின் வாழ்க்கையை அலச நாம் யார்? அந்த அதிகாரத்தை நமக்கு யார் தந்தது? அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும்; நமக்கு என்ன தெரியும்? பணம் வேண்டாம், அந்தஸ்து வேண்டாம், புகழ் வேண்டாம், குடும்பம் வேண்டாம், இவ்வளவு ஏன் - இந்த பாழாய் போன உலகமே வேண்டாம் என முடிவு செய்து அந்த ஒரு ஷணத்தில் இவ்வளவு பெரிய முடிவு எடுதானென்றால் அவன் மனது என்ன பாடுபட்டிருக்கும்.

அப்போ பொதுவாக தற்கொலை தான் எதுக்குமே தீர்வா?

இந்த கேள்விக்கு போகும் முன் ஒரு சிறிய தகவல். 2018-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி, இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை 134,000. ஒப்பு நோக்க, கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை (19 ஜூன் வரையில்) கிட்டத்தட்ட 13,000. 


நாம் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான ஆபத்து என்ன?

இக்கால குழந்தைகளிடம் பாஸிடிவான விஷயங்களை கற்றுக்கொடுக்கும் நாம், நெகடிவான விஷயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என கற்றுக்கொடுக்கிறோமா என தெரியவில்லை. கிரிக்கெட் விளையாட்டை நீங்கள் ரசிப்பவர் என்றால், ஆஸ்திரேலிய வீரர் Glenn Maxwell பற்றி அறிந்திருக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு தனக்கு மனநிலை சரியில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளில் தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாகவும் பகிங்கரமாக அறிவித்தார். அணி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்து அவருக்கு ஊக்கமளித்தது. தற்போது குணமாகி பழைய உற்ச்சாகத்துடன் விளையாடுகிறார்.


உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுப்பது சகஜம். ஆனால் மனசு சரியில்லை என்று யாரும் ஓய்வெடுப்பதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என சிந்திப்பதே காரணம். தோல்வியை சந்திக்க தெரியாமல் தடுமாறுவது, அளவுகடந்த வெற்றி, காதல் தோல்வி, வேலை இடத்தில் அங்கீகாரம் இல்லாமை, என ஆயிரம் விஷயங்களை எதிர்கொள்ள குடும்ப சுழ்நிலை, நட்பு வட்டாரம், அலுவலகத்தில்/பள்ளியில் ஒத்துழைப்பு என அனுகூலமான கட்டமைப்பு அவசியமாகிறது.

"நலம்" என்றால் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்த்து தானே boss?

புதன், 6 மே, 2020

Oh My கொரொனாவே

அன்புள்ள பக்தா,

நீ நேற்று என்னிடம் வேண்டியது புலம்பியது நன்றாகக் கேட்டது. கனவில் வந்து பதில் சொல்வது old style, நானும் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப ஆரம்பித்து நாளாகிவிட்டது.

கொரொனா கிருமியால் ரொம்பவே பாதிக்கபட்டு இருப்பதாகச் சொன்னாய். அத்தனையும் என் செயல் என என் மீதும் பழி சுமத்தினாய். ஒன்றை நீ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தையும் அதில் வாழும் ஜீவராசிகளையும் படைத்தது நானாக இருந்தாலும், அதை தான் வாழும் இடமாகவே இருக்கவேண்டும் என நினைப்பது மனித இனம் மட்டுமே.

நினைத்துப் பார், நானா மனிதனை கண்டதையும் உண்ணச்சொன்னேன்? அக்கிருமி வாழும் இடம் வேறு. அது வெளவால் வயிற்றில் வாழ படைக்கப்பட்டது. அதை நீ உண்டு பின் என்னை குற்றம் சொல்லி என்ன பயன்? 



உலகம் மாறிவிட்டதாகச் சொன்னாய். ஆமாம், அதுவும் நல்லதுக்கே. காற்று சற்று தூய்மையாயிற்று, கடலும் வானும் தன் பங்கிற்கு தூய்மையானது. இந்த உலகமும் பஞ்ச பூதங்களூம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொது என்னும் விதியை மனிதன் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.

மேலும் உன் வாழ்கையை மெம்படுத்த எத்தனை ஒடியிருப்பாய். உன் கால்களுக்கும் ஓய்வு வேண்டாமா? லட்சாதிபதிகளும் கோடீஸ்வரன்களும் தன் பணத்தை வைத்து என்ன செய்ய முடிந்தது? அடங்கி ஒடுங்கி வீட்டில் ஒரு ஓரமாக அமர்ந்து இயற்கையை மிஞ்சிய சக்தி வேறில்லை என உணரத்தானே முடிந்தது?

Sometimes the bad things that happen in our lives put us direction on the path to the best things that will ever happen to us. 

தொழில் சேதமடைந்தது என அழுதாய். உப்பு விற்க போனால் மழை பெய்யுது, மாவு விற்க போனால் காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு வாழ்க்கையின் போக்கிற்கு உன்னை தயார் செய்ய கற்றுக்கொள்.

கடைசியாக, இப்படி வாழ்ந்து என்ன செய்ய செத்து ஒழிவதே மேல் என புலம்பினாய். செத்தொழிந்து என்ன செய்யப்போகிறாய், வாழ்ந்து தான் பாரேன்.

ஆம், உலகம் முன்போல் இருக்காது. ஆனால், இதுவும் கடந்து போகும்.

என்றும் உன்னுடன்,
உன் கடவுள்

வியாழன், 9 ஜனவரி, 2020

பஞ்சார விச்சு குஞ்சு நடந்து


இந்த காணொளியை நீங்கள் அனேகமாக பார்த்திருக்கலாம். இல்லையென்றால் தவறாமல் ஒரு முறையேனும் பார்க்கவும்.






சிரித்து சிரித்து வயிறு வலித்தால் சங்கம் பொறுப்பேற்காது. இதை நகைப்புக்குறிய ஒரு விஷயமாக மட்டுமேனோ நினைக்க மனம் வரவில்லை. சற்று உண்ணிப்பாக கவனிக்க முடிந்தால் பல விஷயங்கள் தொன்றும். காணொளியில் அந்த தாயாரோ குழந்தையுடன் மல்லு கட்ட, அந்த குழந்தையோ “உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே” என்ற தோனியில் பதிலளிக்க, கிட்டத்தட்ட ஒரு மினி மூன்றாம் உலகப் போரே நிகழும் அபாயம் தெரிகிறது.



தன் குழந்தை perfect ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது ஆசை. மற்ற குழந்தைகள் சரியாக பாடத்தையோ பாட்டோ ஏதாகினும் சரியாக பாடம் படிக்கும் போது, நம் குழந்தை தவறாக சொல்லி விட்டால் நம் கெளரவம் என்னாவது என்ற தவிப்பு, இவையனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக தான் அந்த தாயார் தெரிகிறார்.

சிங்கப்பூரில் கியாசு (kiasu) என்ற வட்டாரச்சொல் மிகப்பிரபலம். Fear out of losing  எனப்பொருள் கொள்க. பக்கத்து வீட்டு முழந்தை நன்கு படித்து, தன் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் என்னவது என்ற மனநிலை. அந்த குழந்தை டியூஷன் எடுக்குதா, அதே டியூஷனுக்கு அனுப்பு நம்ம பையனை. அந்த குழந்தை நீலக்கலர் நிக்கர் போட்டிருக்கா, இந்தா எடு அந்த நீலக்கலர் நிக்கர்.

நம் வாழ்க்கையை மற்றவர்களின் செயல்கள் அல்லது சாதனைகள் தீர்மானிக்கின்றனவோ என்ற கேள்வி தான் என் முன்னே.

வேறு கோணத்தில் நோக்க, ஒரு வேளை வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்கின்றோமோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

நண்பர் ஒருவர், நட்பு வட்டாரத்தில் மிகப் பிரபலம். இடியே விழுந்தாலும் கவலையில்லமல் வாங்க சார் டீ சாப்பிடலாம் என்பார். தலை முழுக்க வழுக்கை. கேட்டால், விடுங்க சார், நாமளா போட்டா மொட்டை, சாமியே எடுத்துகிட்டா சொட்டை என்பார்.

தினமும் ரசம் சாதம் தான், என்ன சார் சாம்பார் சாதம் பிடிக்காதா என்று கேட்டதற்கு, “சார், என் மனைவிகிட்ட சாம்பார் சாதம் கேட்கறதும் நடிகர் சிவக்குமார் கிட்ட செல்ஃபி கேட்கறதும் ஒன்னு தான். உசிருக்கு உத்திரவாதம் இல்லை. போற உசிரு ரசம் சாதத்திலேயே போகட்டும்” என்பார்.

மனிதருக்கு பெரிய தொப்பை. “சார், ஒரே வயிரு தானேன்னும் செல்லம் கொடுத்துட்டேன். இப்ப பாருங்க தொப்பையா நிக்குது” என்பார்.

எல்லாவற்றிலும் ஒரு positivity, எவர் கூடவும் போட்டியோ ஒப்பீடோ இல்லை. தன் வாழ்க்கையை தம் கையில், என் போட்டி என்னோடு தான் என்ற ஒரு எண்ணம். இது போன்றோறிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

எது எப்படியோ, பஞ்சார விட்டு குஞ்சு நடந்தா சரி.


சனி, 24 ஆகஸ்ட், 2019

உப்புமா


உப்புமா




விமானப் பயணம் பொதுவாக சுகமானது. மேகங்களூடே பயனித்து பழைய நினைவுகளை அசை போடுவது ஒரு தனி அனுபவம. ஆனால் ராகவனுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. பக்கத்து சீட்டில் ஒரு பெரியவர், இயற்க்கை, சுற்றுச் சூழல் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ராகவனுக்கு தம் அனுபவங்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குளிர்சாதனப்பேட்டியைப் பற்றி மட்டும் அரைமணி நேரம் அறிவுரை. “சார், இந்த ஏசி இருக்குதே, உள்ள எவ்வளவு சில்லுன்னு இருக்கு, ஆனா அது வெளியில விடற உஷ்னம் நமக்கு தெரியாதுஎன்றார்.

ராகவன் மனதில ஒரு சின்ன பிராத்தனைஅப்பா வெங்கடாஜலபதி, என்னய இந்த பெரியவர்கிட்டேர்ந்து காப்பாத்து. திருப்பதிக்கு வந்து காணிக்கை போடறேன். முடிஞ்சா இவரையே உண்டியல்ல போடறேன்”.

ராகவனின் ப்ராத்தனை விமானப் பணியாளருக்கு கேட்டதோ என்னவோ “sir here is your breakfast” என்று எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். கனக்கச்சிதமாக ஒரு கரண்டி உப்புமா, ஒரு வடை அடங்கிய சின்ன டப்பா. உப்புமாவை பார்த்ததும் அப்பாவின் ஞாபகம் எட்டிப்பார்த்தது.



Mr. Cool, என்னுடைய ஒரே  shock absorber. வாழ்நாள் முழுவதும் என்னை சிரிக்க வைத்தார். அம்மா இறந்தபின் ஒரு நாள், என்ன அப்பா உங்களுக்கு வருத்தமே இல்லையா என்றவனிடம், “அப்படி இல்லடா தம்பி, அவள் ஷிப்ட் முடிஞ்சிடிருச்சு, கிளம்பிட்டா. என்ன, இப்போ நான் டபுள் ஷிப்ட் வேலை செய்யனும்என்றார். சொன்னபடி டபுள் ஷிப்ட் வேலை செய்தார். ராகவனின் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை வரை பார்த்தார். 

ஒரு நாள் காலை உணவுக்கு உப்புமா செய்தவரிடம், “அப்பா, என்னை கேட்டா இந்த உப்புமாவை இந்தியாவை விட்டு நாடு கடத்தனும்என்றான் ராகவன். “என்னடா தம்பி உப்புமாவை பத்தி இப்படி சொல்லிட்டே. வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ப்ரெட்டிலேயே உப்புமா செஞ்ச வீரப்பரம்பரை டா நாங்கஎன்றார்.

இன்னொறு நாள் திடீரென்று, “டேய் தம்பி, அம்மாவின் அன்பு தோசை மாதிரி, அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி. தோசையின் சுவையை நீ அறிவாய், தோசை கல்லின் தியாகத்தை நீ அறியமாட்டாய்என்றார் கிட்டத்தட்ட வைரமுத்துவின் குரலில். 

எங்கேப்பா இந்த மாதிரி கடி ஜோக்கேல்லாம் கிடச்சுது?”. 

நம்ம ரிடையர்ட்  ரொளடி facebook- பேஜ்ல வந்ததுடா. என் நண்பர் வீரசேகர் தான் போஸ்ட் பன்னார்”.

வீரசேகர்? பேரே பயங்கரமாக இருக்கு

டேய் தம்பி, நீ ஒன்னுடா, அந்தாள் ஒருநாள் இட்லிக்கு கொஞ்சம் கூட சட்னி கேட்டதுக்கு அவர் வீட்டுகாரம்மா ஒரு அறை குடுத்தாங்க பாரு, அதாள் வாய திறக்க இரண்டு நாள் ஆச்சு”.

ஒரு வேளை நம் அப்பா கூட இந்த பெரியவர் சொன்னது போல ஏசி மாதிரி தானோ? தன்னால் முடியும் மட்டில் குளிர் காற்றை தந்துவிட்டு வெளியில் நமக்கு தெரியாத உஷ்னத்தை கக்கும் மனிதர்”.

“Sir, is everything alright? How may I help you?” என்ற கேட்ட விமான பணியாளரிடம், “Yes, Everything is perfect. Do you mind if you can serve more upma please.” என்றான் தன் கண்களை துடைத்தவாறே.