சனி, 24 ஆகஸ்ட், 2019

உப்புமா


உப்புமா




விமானப் பயணம் பொதுவாக சுகமானது. மேகங்களூடே பயனித்து பழைய நினைவுகளை அசை போடுவது ஒரு தனி அனுபவம. ஆனால் ராகவனுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. பக்கத்து சீட்டில் ஒரு பெரியவர், இயற்க்கை, சுற்றுச் சூழல் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ராகவனுக்கு தம் அனுபவங்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குளிர்சாதனப்பேட்டியைப் பற்றி மட்டும் அரைமணி நேரம் அறிவுரை. “சார், இந்த ஏசி இருக்குதே, உள்ள எவ்வளவு சில்லுன்னு இருக்கு, ஆனா அது வெளியில விடற உஷ்னம் நமக்கு தெரியாதுஎன்றார்.

ராகவன் மனதில ஒரு சின்ன பிராத்தனைஅப்பா வெங்கடாஜலபதி, என்னய இந்த பெரியவர்கிட்டேர்ந்து காப்பாத்து. திருப்பதிக்கு வந்து காணிக்கை போடறேன். முடிஞ்சா இவரையே உண்டியல்ல போடறேன்”.

ராகவனின் ப்ராத்தனை விமானப் பணியாளருக்கு கேட்டதோ என்னவோ “sir here is your breakfast” என்று எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். கனக்கச்சிதமாக ஒரு கரண்டி உப்புமா, ஒரு வடை அடங்கிய சின்ன டப்பா. உப்புமாவை பார்த்ததும் அப்பாவின் ஞாபகம் எட்டிப்பார்த்தது.



Mr. Cool, என்னுடைய ஒரே  shock absorber. வாழ்நாள் முழுவதும் என்னை சிரிக்க வைத்தார். அம்மா இறந்தபின் ஒரு நாள், என்ன அப்பா உங்களுக்கு வருத்தமே இல்லையா என்றவனிடம், “அப்படி இல்லடா தம்பி, அவள் ஷிப்ட் முடிஞ்சிடிருச்சு, கிளம்பிட்டா. என்ன, இப்போ நான் டபுள் ஷிப்ட் வேலை செய்யனும்என்றார். சொன்னபடி டபுள் ஷிப்ட் வேலை செய்தார். ராகவனின் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை வரை பார்த்தார். 

ஒரு நாள் காலை உணவுக்கு உப்புமா செய்தவரிடம், “அப்பா, என்னை கேட்டா இந்த உப்புமாவை இந்தியாவை விட்டு நாடு கடத்தனும்என்றான் ராகவன். “என்னடா தம்பி உப்புமாவை பத்தி இப்படி சொல்லிட்டே. வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ப்ரெட்டிலேயே உப்புமா செஞ்ச வீரப்பரம்பரை டா நாங்கஎன்றார்.

இன்னொறு நாள் திடீரென்று, “டேய் தம்பி, அம்மாவின் அன்பு தோசை மாதிரி, அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி. தோசையின் சுவையை நீ அறிவாய், தோசை கல்லின் தியாகத்தை நீ அறியமாட்டாய்என்றார் கிட்டத்தட்ட வைரமுத்துவின் குரலில். 

எங்கேப்பா இந்த மாதிரி கடி ஜோக்கேல்லாம் கிடச்சுது?”. 

நம்ம ரிடையர்ட்  ரொளடி facebook- பேஜ்ல வந்ததுடா. என் நண்பர் வீரசேகர் தான் போஸ்ட் பன்னார்”.

வீரசேகர்? பேரே பயங்கரமாக இருக்கு

டேய் தம்பி, நீ ஒன்னுடா, அந்தாள் ஒருநாள் இட்லிக்கு கொஞ்சம் கூட சட்னி கேட்டதுக்கு அவர் வீட்டுகாரம்மா ஒரு அறை குடுத்தாங்க பாரு, அதாள் வாய திறக்க இரண்டு நாள் ஆச்சு”.

ஒரு வேளை நம் அப்பா கூட இந்த பெரியவர் சொன்னது போல ஏசி மாதிரி தானோ? தன்னால் முடியும் மட்டில் குளிர் காற்றை தந்துவிட்டு வெளியில் நமக்கு தெரியாத உஷ்னத்தை கக்கும் மனிதர்”.

“Sir, is everything alright? How may I help you?” என்ற கேட்ட விமான பணியாளரிடம், “Yes, Everything is perfect. Do you mind if you can serve more upma please.” என்றான் தன் கண்களை துடைத்தவாறே.