சனி, 20 ஜூன், 2020

மனம் எனும் மருந்து

சமீபத்திய செய்திகளை நீங்கள் வாசித்திருந்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நிகழ்வை அறிந்திருக்ககூடும். 

A brilliant actor par excellence, gone too soon. 

தல தோனியை தான் நடித்த “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நம் கண் முன்னே காட்டியவர். அச்சு அசலாக தோனியின் mannerism, body language அந்த படத்தில இருக்கும். 

34 வயது, heartthrob, அழகன், sheer brilliance in his field of interests. He ticked every box. 



இவன் யாரென்று தெரியாது, சொந்தமோ நட்போ இல்லை. இருந்தாலும் மனசில் ஊசியை அழுத்தி குத்தியது போல வலி. ஏண்டா இப்படின்னு சட்டையை புடிச்சு கேட்கவேண்டும். 

இதில் பெரிய ஆச்சரியம் கலந்த அசிங்கம் ,பத்திரிக்கைகளும், ஊடகங்களூம், சமூக வலைத்தளங்களில் கருத்து கந்தசாமிகளின் பஞ்சாயத்துகளும்... அப்பப்பா, முடியலடா சாமி.

We become defence experts when there are issues at the borders, we become psychiatrists when we hear such suicidal cases, we become medical experts when we hear news about new virus attacks. 

This is beyond Science!

பத்திரிக்கை துறை வழக்கம் போல தன் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை காட்டியது. சுஷாந்தின் தற்கொலை படங்களை ஒளிபரப்புவது, அவரின் பிரியமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரும் போது மைக்கை நீட்டி கருத்து கேட்பது என்று அநாகரீகத்தின் உச்சத்தை தொட்டனர். கருத்து சொல்லும் இடமா அது? சுஷாந்தின் உற்ற தோழி கிருத்தி சனோன் (Kirti Sanon) தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களை வெளுத்து வாங்கியது சற்று ஆறுதல் தந்தது.





என்ன இருந்தாலும் இந்த பையன் இப்படி செஞ்சிருக்க கூடாது, பாவம் அவனை பெத்தவங்க மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று கேட்பவர்கள் தான் இங்கு ஏராளம். Instagram-இல் 11.1 மில்லியன் followers; டிவிட்டரில் 2 மில்லியன் followers, ஆனாலும் பாவம் சார் பையன் தனிமையில் வாடியிருக்கான் போல என வேறு கோணத்தில் அலசல்.

முதலில் ஒருவரின் வாழ்க்கையை அலச நாம் யார்? அந்த அதிகாரத்தை நமக்கு யார் தந்தது? அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும்; நமக்கு என்ன தெரியும்? பணம் வேண்டாம், அந்தஸ்து வேண்டாம், புகழ் வேண்டாம், குடும்பம் வேண்டாம், இவ்வளவு ஏன் - இந்த பாழாய் போன உலகமே வேண்டாம் என முடிவு செய்து அந்த ஒரு ஷணத்தில் இவ்வளவு பெரிய முடிவு எடுதானென்றால் அவன் மனது என்ன பாடுபட்டிருக்கும்.

அப்போ பொதுவாக தற்கொலை தான் எதுக்குமே தீர்வா?

இந்த கேள்விக்கு போகும் முன் ஒரு சிறிய தகவல். 2018-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி, இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை 134,000. ஒப்பு நோக்க, கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை (19 ஜூன் வரையில்) கிட்டத்தட்ட 13,000. 


நாம் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான ஆபத்து என்ன?

இக்கால குழந்தைகளிடம் பாஸிடிவான விஷயங்களை கற்றுக்கொடுக்கும் நாம், நெகடிவான விஷயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என கற்றுக்கொடுக்கிறோமா என தெரியவில்லை. கிரிக்கெட் விளையாட்டை நீங்கள் ரசிப்பவர் என்றால், ஆஸ்திரேலிய வீரர் Glenn Maxwell பற்றி அறிந்திருக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு தனக்கு மனநிலை சரியில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளில் தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாகவும் பகிங்கரமாக அறிவித்தார். அணி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்து அவருக்கு ஊக்கமளித்தது. தற்போது குணமாகி பழைய உற்ச்சாகத்துடன் விளையாடுகிறார்.


உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுப்பது சகஜம். ஆனால் மனசு சரியில்லை என்று யாரும் ஓய்வெடுப்பதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என சிந்திப்பதே காரணம். தோல்வியை சந்திக்க தெரியாமல் தடுமாறுவது, அளவுகடந்த வெற்றி, காதல் தோல்வி, வேலை இடத்தில் அங்கீகாரம் இல்லாமை, என ஆயிரம் விஷயங்களை எதிர்கொள்ள குடும்ப சுழ்நிலை, நட்பு வட்டாரம், அலுவலகத்தில்/பள்ளியில் ஒத்துழைப்பு என அனுகூலமான கட்டமைப்பு அவசியமாகிறது.

"நலம்" என்றால் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்த்து தானே boss?