ஞாயிறு, 30 டிசம்பர், 2018

சூப்பர் ஹீரோஸ்

ஒரு குழந்தையிடமோ இக்கால இளைஞர்களிடமோ super hero யாரென்று கேட்டால் Iron Man, Captain America, Black Panther என்றெல்லாம் ஒரு வேளை சொல்வார்கள். வயது ஏற ஏற, கல்யாணம், குழந்தை, வேலை, EB bill, பால் card, வார இறுதி காய்கறி கடை visit என்றெல்லாம் ஆன பிறகு ஒரு வேளை இந்த super heros உண்மையாகவே இருந்து உலகத்தை காப்பாற்றி ஏதாவது நல்லது செய்ய வருவார்களா என ஏங்குவோம்




தப்பே இல்லை சார், நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் அப்படி.

உண்மையிலேயே யார் தான் சார் சூப்பர் ஹீரோவில்லன்களை அடித்து நொறுக்கும் ஹீரோக்களாஒரே நாளில் முதல்வராகி  ஊரையே மாற்றும் கதாநாயகர்களாஏதோ ஒரு கவசத்தை மாட்டிக்கொண்டு ஆகாயத்திலிருந்து குதித்து அந்த ஏலியன்களை பந்தாடும் மாமனிதர்களா


I don't think so.


என்னை பொருத்தவரை, வேலை செய்யும் இடத்தில் கஷ்டமோ அவமானமோ சகித்திக்கொண்டு, வரவைவும் செலவையும் முடிந்த வரை சமாளித்து, கடனை உடனை வாங்கி தன் பிள்ளைகளை மேலே கொண்டுவர தனக்கென்று பெரிதாக ambitions எதுவும் வைத்துக்கொள்ளாத மிடில் க்ளாஸ் பெற்றோற்கள் அனைவரும் Super heroes தான். 


கேட்டால், “ஏதோ சார் நம்ம பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்” என்பார்கள். 


இவர்களும் நம்முடன் தான் வழ்கிறார்கள், தான் ஹீரோக்கள் என்று தெரியாமலே. ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இம்மனிதர்கள் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் லேட்டாகப் புரிகிறது. 



என் அத்தை பாட்டி (தாத்தாவின் தங்கைநான் நான் சிறுவயதில் பார்த்த முதல் ஹீரோயின். 1அல்லது 13 வயதில் பாலவிவாஹம்சில வருடங்களில் கணவனை பறிகொடுத்தபின் தன் 85 வயது வரைஅதாவது கிட்டத்தட்ட 60 வருடங்கள் வாழ்க்கையை யார் தயவின்றி சொந்தக்காலில் நின்று வாழ்ந்துகாட்டி சாதித்த champion.


அப்பளம் விற்றுவிஷேஷங்களில் சமையல் செய்து தன் தேவைகளை கவனித்துக்கொள்வார்தன் அண்ணனிடம் (என் தாத்தாஎனக்குத் தெரிந்து எதுவும் கேட்டதில்லை


அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைப்பதில்லைஇருந்தாலும் படிப்பு தராத நம்பிக்கை தான் கற்றிக்கொண்ட சமையல் கலை அவருக்கு தந்ததுசளி காய்ச்சல் என்று படுக்கமாட்டார்அவ்வளவு கடின உழைப்பாளி.  


அத்தை பாட்டிஅப்பளத்திற்கு மாவு இடிச்சு தரட்டுமா?” என்று கேட்டால் போதும், 2 ரூபாய் தருவார்அதை கொண்டு ரப்பர் ball வாங்கி கிரிக்கெட் விளையாடிய அனுபவம் நிறையஅவர் கையால் வெறும் சுட்ட அப்பளமும் வற்றல் குழம்பும் சாப்பிட்டு இந்த ஜென்ம சாபல்யம் ஆனது என நினைத்த நாட்கள் பல. 


Thanks for everything அத்தை பாட்டி. You are a true hero. 


இவர்கள் எதிர்ப்பார்பது recognition அல்ல, just respect. 


By the way, உங்க சூப்பர் ஹீரோ யாரு?